24 மணி நேரத்தில் அரசு பங்களாவை காலி செய்ய காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்திக்கு உத்தரவு

0 2167

24 மணி நேரத்தில் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், கடந்த மாதம், ஸ்ரீநகரில் இருந்த முதலமைச்சர் இல்லத்தை காலி செய்யுமாறு மெகபூபாவிற்கு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் தான் கடைசியாக வெற்றிபெற்ற அனந்த்நாக்-ல் (Anantnag) உள்ள அரசு பங்களாவில் தங்கிவந்தார். தற்போது அவருக்கும் மேலும் 7 முன்னாள் எம்.எல்.ஏ-களுக்கும் அரசு பங்களாக்களை 24 மணி நேரத்தில் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments