கார்த்திகை தீபத்திற்காக அமோகமாக நடைபெற்ற மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி..!

0 1271

கார்த்திகை தீபத்திற்காக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருநாளின் போது கோயில், வீடு, வர்த்தக நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்துவார்கள்.

இதில் மண் அகல்விளக்குகள் நாங்குநேரி அருகிலுள்ள மாவடி சுற்றுவட்டார கிராமங்களில் தயாரிக்கப்பட்டு அருகிலுள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அகல் விளக்குகள் தயாரிக்க போதுமான மண் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இத்தொழிலில் ஈடுபட்டு வரும் மண்டபாண்ட கைவினைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments