தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு 295 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது

0 1171

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் ஆகியவற்றில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 3 லட்சத்து 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

சென்னையில் கே.கே நகர், ராமாபுரம், கிண்டி அண்ணா பல்கலைக் கழகம், வேளச்சேரி, அமைந்தகரை மற்றும் தனியார் கல்லூரிகள் என 16 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

வாட்ச், சீப்பு, செல்போன் போன்ற பொருட்களை கொண்டு வர அனுமதியில்லை என்பதால் தேர்வெழுத வந்தவர்களை அதிகாரிகள் சோதனை செய்து பின்னர் தேர்வு மையத்துக்கு அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments