மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.?

0 2574

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பெண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் எழும்பூர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சங்கீதா என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், இங்குபேட்டரில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மருத்துவமனை வார்டில் இருந்த சங்கீதா மாயமானதால், சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர் மருத்துவமனையில் இருந்து, அதிகாலை வேளையில் வெளியேறியது தெரியவந்தது.

இதனிடையே, புட்லூர் அருகே ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரித்ததில், உயிரிழந்தது சங்கீதா தான் என்பது உறுதியானது.

அவர் தற்கொலை செய்துகொள்ள மருத்துவமனையில் இருந்து வெளியேறினாரா? அல்லது வேறு ககாரணங்கள் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments