பேருந்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் சென்னை மாநகரப்பேருந்துகளில் நாளை அறிமுகம்..!

0 1471

சென்னை மாநகரப்பேருந்துகளில் அடுத்த நிறுத்தங்களின் பெயரை, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

GPS உதவியுடன் செயல்படும் ஒலிபரப்பு கட்டமைப்பில், பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு முன்பாக, 300 மீட்டர் தூரத்தில், நிறுத்தங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், இத்திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments