2 வயது குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தோல்வி..? ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார்..!

0 2370
2 வயது குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தோல்வி..? ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார்..!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால், குழந்தை உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓட்டேரியை சேர்ந்த தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு, பிறந்ததில் இருந்தே தலையில் மூளைக்கு அருகே சிறிய கட்டி ஒன்று இருந்த நிலையில், அதனை ஆபரேஷன் மூலமாக அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு, கடந்த திங்கட்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால், குழந்தைக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு, ஒரு கை மற்றும் கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பெற்றோர், முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேசனில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments