போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை என தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு..!

0 1506

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, வரும் 2-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.

சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில், தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில், தொழிற்சங்கத்தினர், போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments