சாலையோர ஹோட்டல் உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த ஊழியர் கைது..!

0 1446

சேலம் மாவட்டம் அரியானூரில் சாலையோர ஹோட்டல் உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்ததாக, ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். 

உடையாபட்டியைச் சேர்ந்த கந்தசாமி, அரியானூரில்  ஹோட்டல் நடத்தி வருகிறார். பராமரிப்பு பணி நடந்து வந்ததால்,  இரவு நேரத்தில் ஹோட்டலில்  கந்தசாமி தூங்குவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று இரவு தூங்கியபோது, ஹோட்டலில் உடன் தங்கிய ஊழியர் ஜோசப் என்பவர், பொருட்களை திருடியதாகவும், அப்போது  தகராறு ஏற்பட்டதில் கந்தசாமியை கொலை செய்துவிட்டு ஜோசப் தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் கந்தசாமி சடலமாக கிடப்பதாக வந்த தகவலின்பேரில், இன்று காலை மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்திய போலீசார், அரியானூர் அருகே பதுங்கி இருந்த ஜோசப்பை கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments