புகையிலை விற்பனை தொடர்பாக கடையில் சோதனை செய்ய வந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாள் காட்டி மிரட்டிய பெட்டிக்கடைக்காரர் கைது!

0 2033

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை விற்பனை தொடர்பாக சோதனை செய்ய வந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளைக் காட்டி மிரட்டியதாக, பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

பாலவனத்தம் பகுதியில் ஆத்திலப்பன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது, போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய பெட்டிக்கடைக்காரர், போலீசார் சிலருக்கு லஞ்சம் தருகிறேன், எதற்கு என் கடையில் சோதனை மேற்கொள்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் ஆத்திலப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments