இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த இருவர் மீண்டும் கைது!

0 2020

செங்கல்பட்டில், இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த இருவர், மற்றொரு கொலைச் சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 6ந் தேதி நடைபெற இரட்டைக் கொலை தொடர்பாக ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் மாமண்டூர் பாலாறு அருகே போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

மேலும், மாதவன் மற்றும் கொலைக்கு மூளையாக செயல்பட்ட ஜெஸ்ஸிகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு நகர் பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மாதவன் மற்றும் ஜெஸ்ஸிகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments