சட்டவிரோதமாக சிம்பாக்ஸ் கருவி பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அழைப்பு.. 3 பேரிடம் விசாரணை!

0 1622

சென்னையில், சட்டவிரோதமாக சிம்பாக்ஸ் கருவியை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் மேற்கொண்ட 3 பேரை பிடித்து, மத்திய தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைந்தகரையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக செல்போன் அழைப்புகள் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த வெளிநாடுகளில் இருந்துவரும் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் சிம்பாக்ஸ் கருவிகள், 120 சிம் கார்டுகள், 2 ரவுட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றை பயன்படுத்திய 3 பேரை பிடித்த அதிகாரிகள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உண்டா? என விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments