மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்பு: ரூ.1,000 நிவாரணம் வழங்க அரசாணை

0 1523

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 10,11ம் தேதிகளில் அளவுக்கு அதிகமாக பெய்த மழையால், அம்மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க, தமிழக அரசு 16 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments