பிராங்க் வீடியோ புகார் .. யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

0 2033

பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் ,கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 youtube சேனல்கள் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இதன் பேரில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments