"வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி வலுவிழப்பு" - இந்திய வானிலை மையம்..!

0 4149

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments