பொதுமக்களிடம் தீபாவளி சீட் நடத்தி ரூ.27 கோடி மோசடி செய்த 4 பேரை கைது செய்த போலீஸ்..!

0 3298

திருவள்ளூர் மாவட்டத்தில், தீபாவளி சீட்டு நடத்தி 27 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜே.பி ஏஜென்சி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலந்தூரை சேர்ந்த ஜோதி, மாவட்டம் முழுவதும் சுமார் மூவாயிரம் முகவர்களை நியமித்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் தருவதாக கூறி தீபாவளி சீட் நடத்தி பணம் வசூலித்து தலைமறைவானார்.

புகாரின் பேரில் ஜோதி உள்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, இருவர் கைதான நிலையில், செங்குன்றம் பகுதியில் தலைமறைவாக இருந்த ஜோதி உள்பட அவரது குடும்பத்தார் 4பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments