பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்..!

0 1892

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர்.

ஈச்சம்பள்ளம் கிராமத்தில் முருகேசன் என்பவரது விளைநிலத்தில் புகுந்த ஒரு குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள், பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.

யானைகளின் பிளறல் சத்தம் கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை அருகிலுள்ள மொரப்பூர் காப்புக்காட்டிற்கு விரட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments