5 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

0 2791

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலைகொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும், தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments