சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பிரதோஷ பூஜையில் சுவாமி தரிசனம் செய்ய கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!

0 3142

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு உட்பட்ட கமலாலய திருக்குளத்தின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் சமேத நாகநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார ப்ரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் ஸ்ரீதான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments