இந்தியா வரும் சர்வதேச பயணிகள் ஏர் சுவிதா படிவங்கள் நிரப்புவதை நிறுத்தியது மத்திய அரசு.!

0 3099

இந்தியா வரும் சர்வதேச பயணிகள் ஏர் சுவிதா படிவங்கள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் அவர்களது தற்போதைய உடல்நிலை, சமீபத்திய பயண விவரங்கள் உள்ளிட்டவற்றை ஏர் சுவிதா தளத்தில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

படிவத்தில் நிரப்பும் ஆவணங்களை பயணிகள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்திருப்பதாலும், தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்டிருப்பதாலும், ஏர் சுவிதா படிவங்களை நிரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments