இரவு பணிக்கு சென்ற தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!
நெல்லை பேட்டையில் இரவு பணிக்கு சென்ற தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நடுக்கல்லூரைச் சேர்ந்த நம்பி என்பவர் பேட்டை தொழிற்பேட்டை வளாகத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நேற்றிரவு பணிக்கு சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ண ஜெயந்தியின் போது நடந்த பிரச்சினையே இக்கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
Comments