23 சவரன், ரூ.4 லட்சம், வைப்பு தொகைக்கான பாண்ட் ரசீதை தவறவிட்ட நபர்.. நேர்மையாக ஒப்படைத்த முதியவர்

0 2858
மதுரை உசிலம்பட்டியில் தெருவில் கிடந்த, 23 சவரன் நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் முன் வைப்பு தொகைக்கான பாண்ட் ரசீதை, முதியவர் ஒருவர், வங்கி உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

மதுரை உசிலம்பட்டியில் தெருவில் கிடந்த, 23 சவரன் நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் முன் வைப்பு தொகைக்கான பாண்ட் ரசீதை, முதியவர் ஒருவர், வங்கி உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

வில்லாணியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் சின்னசாமி, நகைகள் மற்றும் பாண்ட் ரசீது உள்ளிட்டவற்றை துணிப்பையில் எடுத்துக்கொண்டு, உசிலம்பட்டியில் உள்ள வங்கி லாக்கரில் வைப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வழியில் பையை தவற விட்டார்.

நாகராஜ் என்ற முதியவர், அந்த பையை எடுத்து, அதிலிருந்த மத்திய கூட்டுறவு வங்கி புத்தகத்தின் தகவல்களை வைத்து, வங்கி மேலாளரிடம் அந்த பையை ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments