போலி தங்க நாணயங்களை அளித்து மோசடி செய்ய முயற்சி.. கையும் களவுமாக சிக்கிய நபரை பிடித்து போலீசில் ஒப்படைப்பு

0 2785

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே போலி தங்க நாணயத்தை அளித்து மோசடியில் ஈடுபட முயன்றதாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மழவராயன்பட்டியை சேர்ந்த அயூப்கான் என்பவரை அலைபேசியில் அழைந்த மர்ம நபர் ஒருவர் குறைந்த பணத்திற்கு அதிக தங்க நாணயங்கள் தருவதாக கூறியுள்ளார்.

எதிர்முனையில் பேசுபவர், மோசடி நபர் என அறிந்த அயூப்கான், நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்க நாணயங்களை தருமாறு கூறியுள்ளார். இதன்படி ஆலங்குடி வந்த இளைஞர் 20  நாணயங்களை கொடுத்துள்ளார்.

அதை பரிசோதித்து போலி என்பதை கண்டுபிடித்த அயூப்கான், இளைஞரை பிடித்து  போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் கர்நாடகாவைச் சேர்ந்த விஜயகுமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments