போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை.. கிளினிக், மருந்தகத்திற்கு பூட்டு போட்ட மருத்துவ அதிகாரிகள்!

0 2928

திருப்பூரில், போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம் அருகே உள்ள தனியார் மருத்துவ கிளினிக்கில்  மருத்துவச் தகுதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்ததாக நோயாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.

இதனை அடுத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகள் கிளினிக்கில் பணியில் இருந்த டாக்டர், செவிலியர் உதவியாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பவித்ரா என்பவர் டாக்டராக இருப்பதாக ஆவணங்களில் கூறப்பட்ட நிலையில் வேறு ஒருவர் அங்கிருந்து சிகிச்சை அளித்து வருவது கண்டறியப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments