மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு..!

0 3971
மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கைப்பணி குப்பத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

இதுகுறித்து இளையராஜாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருதரப்பினரையே இன்று ஏற்பட்ட மோதலில், 4 பேருக்கு மண்டை உடைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments