ரத்த மாதிரி மூலமாக நோய்களை கண்டறியும் இயந்திர மோசடி - இளம் பெண் தொழிலதிபருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!
ரத்த மாதிரியைக் கொண்டு நோய்களை கண்டறியும் பரிசோதனை இயந்திரம் தயாரிப்பு மோசடி தொடர்பாக தெரனோஸ் நிறுவனத்தின் தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் ஆனி ஹோல்மெஸ் தனது 19 ஆவது வயதில் தெரனோஸ் என்ற நிறுவனத்தை 2003 ஆம் ஆண்டு துவங்கி ரத்தப் பரிசோதனை மூலமாக அனைத்து விதமான நோய்களையும் கண்டறியும் இயந்திரம் கண்டுபிடித்து வருவதாக அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்தார்.
ஆனால், அந்த இயந்திரம் போலியானது என்ற குற்றச்சாட்டில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Comments