ஒரே இடத்தில் நின்று கொண்டு யாராலும் சாதிக்க முடியாது - நடிகை சுகாசினி

0 3348
ஓடி ஓடி தான் ஒருவரால் சாதிக்க முடியும் ஒரே இடத்தில் நின்று கொண்டு யாராலும் சாதிக்க முடியாது என்று நடிகை சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.

ஓடி ஓடி தான் ஒருவரால் சாதிக்க முடியும் ஒரே இடத்தில் நின்று கொண்டு யாராலும் சாதிக்க முடியாது என்று நடிகை சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கான புற்று நோய் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் ஒன் என்ற அமைப்பு சென்னை ரன்ஸ் என்ற மாரத்தான் என்ற நிகழ்ச்சியை டிசம்பர் 11ஆம் தேதி நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய நடிகை சுகாசினி காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றவர், அனைவரும் இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments