செல்போனில் விளையாடியபடி சென்ற 3 வயது சிறுமி 20 அடி ஆழ கிணற்றில் விழுந்து பலி..!

0 3450

திட்டக்குடி அருகே செல்போனில் விளையாடியபடி சென்ற 3 வயது சிறுமி,  கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், துபாயில் பணிபுரியும் நிலையில், அவருடைய மனைவி சங்கீதா, 6 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ரிஷ்மிதாவுடன்  வசித்து வந்தார்.

சங்கீதா விவசாயப் பணிக்கு செல்லும்போது,  ரிஷ்மிதாவிடம் செல்போனை கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதை வைத்து  விளையாடிய ரிஷ்மிதா, வயல் வெளிக்கு அருகே இருந்த 20 அடி ஆழ தரைக் கிணற்றில் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் வந்து ரிஷ்மிதாவை சடலமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments