எலன் மஸ்க்கின் எச்சரிக்கையை அடுத்து ராஜினாமா கடிதங்கள் அளித்த ஊழியர்கள்.. ட்விட்டர் நிர்வாகத்தில் பெரும் குழப்பம்!

0 6069

ஊழியர்கள் பணி நீக்கம், தாமாகவே ராஜினாமா செய்யும் ஊழியர்கள் என்று எலன் மஸ்க் கைப்பற்றிய ட்விட்டரின் புதிய நிர்வாகத்தில் பெரும் குழப்பமான சூழல் காணப்படுகிறது.

பல அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை என்றால் மூன்று மாத ஊதியத்துடன் பணியை விட்டு விலகுமாறு ஊழியர்களுக்கு எலன்மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நிறைய ஊழியர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்து வருகின்றனர். ட்விட்டர் தலைமை அலுவலகத்திலும் பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments