ரூ.1500 பணத்தை திருப்பி தராததால் ஆம்புலன்ஸ் ஏற்றி ஒருவர் கொலை.. ஓட்டுநர் கைது!

0 3262

விருதுநகர் மாவட்டத்தில் 1,500 ரூபாய்  பணத்தை திருப்பி தராததால் ஆம்புலன்ஸ் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார்.

பட்டாம்புதூரைச் சேர்ந்த டிவி மெக்கானிக்கான சங்கரலிங்கம் என்பவரிடம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகன் என்பவர் தனது டிவியை பழுது பார்க்கும்படி 1,500 ரூபாய் பணம் கொடுத்த நிலையில் அதனை பழுது பார்க்காமல் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது டிவியை திரும்ப பெற்றுக்கொண்டவர், சங்கரலிங்கத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், அதை தராமல் அவர் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அவரை ஆம்புலன்ஸ் ஏற்றி கொன்றதாக தெரிவித்த நிலையில் முருகன் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments