குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழப்பு-உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

0 2472

சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், முறையான சிகிச்சை அளிக்காததால் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநீர்மலையை சேர்ந்த ஆஷா என்பவருக்கு கடந்த புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் இங்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குழந்தை நன்றாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்துவிட்டதாக தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments