காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 3138

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

அருணாச்சல் பிரதேச மாநிலம் இடாநகரில் புதிய விமான நிலையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட குறிப்பில், இடா நகரில் புதிய விமான நிலையம் மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான நீர் மின் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாரணாசி செல்ல உள்ள பிரதமர் அங்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.தமிழின் பழங்காலத் தொன்மையுடன் காசிக்கு உள்ள தொடர்பை போற்றும் வகையில் ஒரு மாத காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் வாரணாசியில் நடைபெற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments