இந்தோனேஷியாவில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் சோதனை ஓட்டம்..!

0 3970

இந்தோனேஷியாவில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலுக்கான வெள்ளோட்டம் சீன அதிபர் முன்னிலையில் நடத்தப்பட்டது.

சீன அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தோனேஷியாவின் ஜகர்தா-பான்டங்க்  இடையே இந்த ரயில் விடப்படும் நிலையில் அதன் கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

எனவே, டீகல் லூர் ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு நடத்தப்பட்ட ரயிலின் சோதனை ஓட்ட வீடியோ காட்சிகளை சீன அதிபர் ஜீ ஜின்பிங், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடாடோ ஆகியோர் பாலியில் இருந்து பார்வையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments