அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவுப்பு..!

0 4631

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, வரும் 20ஆம் தேதியன்று நாகை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், வரும் 21ஆம் தேதியன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments