தனியார் நிறுவனத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் மற்றும் ஆப்பிள் லேப்டாப்-களை விற்று மோசடி செய்த வழக்கில் மூன்று பேர் கைது..!

0 7067

சென்னையில், தனியார் நிறுவனத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் மற்றும் ஆப்பிள் லேப்டாப்-களை விற்று மோசடி செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரில், தனது நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் பிரதாப் பசுப்புலேட்டி மற்றும் டெலிவரி பிரிவில் பணிபுரிந்து வந்த குமாரவேல் ஆகிய இருவரும் 8 கோடியே 29 லட்ச ரூபாய் மதிப்பிலான 1074 ஐபோன் மற்றும் 3 லேப்டாப்-களை வெளியாட்களுக்கு விற்று பணத்தை கையாடல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பிரதாப் பசுப்புலேட்டி என்பவரை நெல்லூரில் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குமாரவேல் மற்றும் வெங்கடேஷ்வரலு ஆகியோரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments