சீனப்படைகளை எதிர்கொள்ள எல்லையில் படைபலத்தையும், உள்கட்டுமானத்தையும் அதிகரிக்கும் இந்தியா .!

0 2963

சீனாவின் படைக்குவிப்புகளுக்கு மத்தியில் கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா தனது படைபலத்தையும் உள்கட்டுமானத்தையும் அதிகரித்துள்ளது.

450 பீரங்கிகளை நிறுத்தும் வகையிலும் கூடுதலாக 22 ஆயிரம் வீரர்களைக் குவிக்கும் வகையிலும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.சீனாவை எதிர்கொள்ள ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கான இரண்டு மையங்களை இந்தியா அமைத்துள்ளது.

இதன் மூலம் எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதும் பொருட்களை எடுத்துச் செல்வதும் எளிதாகும். தாக்குதல் நடத்தக்கூடிய ஹெலிகாப்டர்கள் இங்கு ஒரு நேரத்தில் 12 வீரர்களை அழைத்துச் செல்லும். 3டி பிரிண்டட் தற்காப்பு சாதனங்களும் முதன்முறையாகப் பரிசோதித்து நிறுவப்பட்டுள்ளன.

சிறிய ஆயுதங்கள், ஏவுகணைத் தாக்குதல்களை இது தடுக்கும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments