வாட்ஸ் ஆப் இந்தியத் தலைமை அதிகாரி அபிஜித் போஸ் ராஜினாமா

0 3623

வாட்ஸ் ஆப் இந்தியத் தலைமை அதிகாரியாக இருந்த அபிஜித் போஸ் ராஜினாமா செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அப்பொறுப்பில் இருந்த அஜித் மோகன் ராஜினமாமா செய்ததையடுத்து அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவரும் மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குனரான ராஜீவ் அகர்வாலும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.இதனையடுத்து ராஜீவ் அகர்வாலுக்கு மாற்றாக சிவநாத் துக்ரால் நியமிக்கப்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் முக்கியக் கொள்கை முடிவுகளை சிவநாத் எடுத்து அதனைத் தலைமையேற்று நடத்திச் செல்வார் என்று மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments