சென்னையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 4 பேரிடம் விசாரணை..!

0 3430

சென்னையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 4 பேரின் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், 15 லட்சம் ரொக்கம், 150 செல்போன்கள், லேப்டாப், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி 43 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.

அதன் மூலம் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு, போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை வழங்கி, ஆதரவாக செயல்பட்டு தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சென்னை மண்ணடி, கொடுங்கையூர், ஏழுகிணறு, பகுதிகளில் 4 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments