விபத்துக்கான நஷ்ட ஈடு வழங்காததால் பயணிகளுடன் சென்ற அரசு விரைவுப் பேருந்து நடுவழியில் நிறுத்தி ஜப்தி..!

0 3330

விபத்துக்கான இழப்பீடுத் தொகை வழங்காததால் பயணிகளுடன் சென்ற அரசு விரைவுப் பேருந்து, நடுவழியில் நிறுத்தப்பட்டு ஜப்தி செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் ஊ.கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பச்சமுத்துவின் மாட்டு வண்டியின் மீது அரசுப் பேருந்து, 2015 ஆம் ஆண்டு மோதியதில் 2 மாடுகள் இறந்தன.

எனவே, அவருக்கு நஷ்டஈடாக 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் வழங்க, விருத்தாசலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், இழப்பீட்டுத்தொகை வழங்கப்படாததால், திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்ற அரசு விரைவுப் பேருந்தை, வேப்பூரில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments