ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து பணத்தையும், திண்பண்டங்களையும் திருடிய மர்ம நபர்கள்..!

0 2652

சென்னை ஓட்டேரியில் உள்ள ஆவின் பாலகத்தின் ஷட்டர் பூட்டை, கடப்பாரையைக் கொண்டு உடைத்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கடந்த 14ம் தேதி அதிகாலை, ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலகத்திற்கு பைக்கில் சென்ற இரு கொள்ளையர்களில் ஒருவன் காவலுக்கு வெளியே நிற்க, மற்றொருவன் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு பணத்தையும், நெய், குளிர்பானங்களை திருடிய காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

கல்லாவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், திருட்டில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments