மீண்டும் உக்ரைன் வசம் வந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி.!

0 3244

உக்ரைனின் கெர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

ரஷ்யப் படைக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த 8 மாதங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் கடந்த வாரம் வெளியேறியது.

ரஷ்யப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கெர்சோனுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இதனிடையே அங்கு சென்ற ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments