எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கியபோது தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 4 மாணவர்கள் காயம்

0 3251

விழுப்புரம் நாகந்தூர் பகுதியில் மாணவர்களை ஏற்றிவந்த பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

செஞ்சி ரெட்டணை பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியின் வேன், இன்று காலை நாகந்தூர் பகுதியில், எதிரில் வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியபோது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த நிலையில், நான்கு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வேனில் குறைவான மாணவர்களே இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments