வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்தபோது மழைநீரில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த நகரமன்ற தலைவரின் கணவர்!

0 4567

சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சியில் அமைச்சர் ஆய்வு செய்த போது நகரமன்ற தலைவரின் கணவர் மழைநீரில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

கனமழை காரணமாக எஸ்.பி.அவென்யூ, அம்மா நகர், லட்சுமி புரம் சாலை, எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.அவென்யூ பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தபோது நகர மன்ற தலைவர் காஞ்சனாவின் கணவர் சுதாகர் நிலை தடுமாறி மழைநீரில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தோர் அவரை தூக்கி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments