என்னை யாரும் மதிக்கல... கைது செய்து சிறையிலடைக்குமாறு சாலையில் படுத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி!

0 3418

மதுரை மாவட்டம் செக்கானூரனியில் சாலையில் படுத்தபடி போதை ஆசா ரகளையில் ஈடுபட்டார்.

வடக்கம்பட்டியைச் சேர்ந்த நல்லகுரும்பன், மதுபோதையில் காவல்நிலையத்திற்கு வந்து குடும்பத்தில் யாரும் தன்னை மதிக்கவில்லை என கூறி, தம்மை கைது செய்து சிறையிலடைக்குமாறு கெஞ்சியுள்ளார்.

போலீசார் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் படுத்து ரகளை செய்தார்.

கைது செய்யவில்லையென்றால் சாலையிலிருந்து எழுந்திருக்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.

அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அழைத்து சென்று லாக்கப்பில் வைத்து போதை தெளிந்த பிறகு வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments