அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

0 43807
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

கேரள - தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வரும் 15ஆம் தேதியன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் ஒருசில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments