மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை : அமைச்சர் எ.வ.வேலு

0 2854
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த 20 நாட்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணி என்பதை திமுக ஆட்சியில் கடைபிடித்து வருகிறோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments