திருமணம் நடைபெற்ற அன்றே உயிரிழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. உடைமாற்ற அறைக்கு சென்ற புதுமாப்பிள்ளை மரணம்..

0 9092
திண்டிவனம், கோட்டக்குப்பம் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்றே சாஃப்ட்வேர் இன்ஜினியரான புதுமாப்பிள்ளை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம், கோட்டக்குப்பம் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்றே சாஃப்ட்வேர் இன்ஜினியரான புதுமாப்பிள்ளை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, ஈஸ்ட் தாம்பரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கும், கோட்டக்குப்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்  புதுச்சேரியில் நேற்று காலை நடந்துள்ளது.

கோட்டக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, அனைவரும் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் உடை மாற்ற அறைக்கு சென்ற சுரேஷ்குமார் வெகுநேரமாக  வெளியே வராததால், உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.

அறையில் மயங்கிய நிலையில் இருந்தவரை புதுச்சேரி ஜிப்மர் கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments