3 வயது சிறுவனுக்கு தனது ஆடையில் இருந்த பாப்பி மலரை கொடுத்த வேல்ஸ் இளவரசி கேத்தரின்..!

0 4007

வேல்ஸ் இளவரசி கேத்தரின் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் தனது ஆடையில் அணிந்திருந்த சிகப்பு கலர் பாப்பி மலரை விரும்பிய சிறுவனுக்கு அதை வழங்கினார்.

லண்டனில் உள்ள குழந்தைகள் மையத்திற்கு கேத்தரின் சென்றார்.

அப்போது தனது பெயரை கேட்ட 3 வயது சிறுவன் அகீமுடன் கேத்தரின் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவரது ஆடையில் இருந்த பாப்பி மலரையே சிறுவன் அகீம் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதனைக் கவனித்த கேத்தரின், இது உனக்கு வேண்டுமா எனக்கேட்டு தனது ஆடையில் இருந்து கழற்றி சிறுவனுக்கு கொடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments