ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!

0 3454

சென்னையில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாப்பூர் போலீசார் நடத்திய விசாணையில் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், "நான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன், வாழ்க்கை வெறுத்துவிட்டது, தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் கோல்டு காயின்ஸ் என்ற ஆன்லைன் விளையாட்டில் சரண் அதிக பணத்தை இழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சரண், கடந்த நான்கு மாதங்களாக சென்னை மயிலாப்பூரில் வாடகை வீட்டில் தங்கி சி.ஏ படித்து வந்தார்.

அவரது தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments