ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஜோஹோ

0 17616

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மென்பொருள் நிறுவனமான ஜோஹோ, உலகளாவிய வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது என்றாலும், நடப்பு ஆண்டில் அதன் வளர்ச்சி குறையும் என்று நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.

பயனர்களுக்கு அதிவேக நெட்வொர்க்குகளை வழங்க அடுத்த 5 ஆண்டுகளில், உலகம் முழுவதும் 100 நெட்வொர்க் பாயிண்ட்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜோஹோ நிறுவனம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments