திருவாரூர் To சென்னை... 4 மணி நேரத்தில் பறந்து வந்த இதயம்.. வடமாநில நபருக்கு மறுவாழ்வு!

0 4717

திருவாரூர் அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருவாரூரைச் சேர்ந்த 35 வயதான ஐயப்பன் என்ற நபர் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, இதயம் மற்றும் நுரையீரல் தானமாக பெறப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, 4 மணி நேரத்தில் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.

சென்னை அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில நபருக்கு உடல் உறுப்புகள் பொருத்தப்பட உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments